தமிழ்நாடு

ஆட்டோவில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- டிரைவர் கைது

Published On 2022-09-27 09:03 GMT   |   Update On 2022-09-27 09:03 GMT
  • தனது தோழியுடன் சோழிங்கநல்லூர் அருகே தங்கி இருக்கும் ஓட்டலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆட்டோவில் மாணவி சென்றார்.
  • மாணவி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆட்டோவின் பதிவு எண், பணம் செலுத்திய விபரங்களையும் பதிவு செய்தார்.

பள்ளிக்கரணை:

தரமணியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று இரவு தனது தோழியுடன் சோழிங்கநல்லூர் அருகே தங்கி இருக்கும் ஓட்டலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆட்டோவில் சென்றார்.

அங்கு சென்று இறங்கியதும் ஆன்லைன் மூலம் அந்த டிரைவருக்கு பணம் செலுத்தினார். அந்த நேரத்தில் ஆட்டோ டிரைவர் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த ஆட்டோவின் பதிவு எண், பணம் செலுத்திய விபரங்களையும் பதிவு செய்தார்.

இது தொடர்பாக மாணவி செம்மஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவின் பதிவு எண் மற்றும் விபரங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News