நெல்லையில் இன்று மாலை 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை
- தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று நெல்லை வருகிறார்.
- காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
நெல்லை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று நெல்லை வருகிறார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாலை 3.30 மணிக்கு 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), ஹரிகிரண்பிரசாத் (கன்னியாகுமரி), நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் 4 மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாகவும், பழைய வழக்குகள் தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி பேச உள்ளார்.
மேலும் 4 மாவட்டங்களிலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார். பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறார்.