தமிழ்நாடு
கட்டுமான வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி நிவாரண தொகை- முதலமைச்சர் வழங்கினார்
- பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள்/ வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 கோடி.
- கட்டுமான வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள்/ வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி பணியிடத்து விபத்து மரண நிவாரணத்தொகை வழங்கிடும் அடையாளமாக 7 நியமனதாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.