தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1850 கன அடியாக அதிகரிப்பு
இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை குறைந்ததால் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 1539 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 1850 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 105.50 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று அதே அளவில் நீடிக்கிறது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை குறைந்ததால் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 1539 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 1850 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 105.50 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று அதே அளவில் நீடிக்கிறது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.