தமிழ்நாடு
.

வடமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரிப்பு

Published On 2022-04-04 10:08 GMT   |   Update On 2022-04-04 10:08 GMT
சேலம் மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகடைந்துள்ளது.
சேலம்:

சேலம் மாவட் டத்தில் ஏராளமான தேங்காய் மண்டிகள் உள்ளன. இங்கு சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேங்காய்கள் விற்பனைக்கு வருகிறது. 

முழு மட்டையுடன் மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் தேங்காய்களில், பாதியளவுக்கு நார் உரிக்கப் பட்டு, பின்னர் அவை லாரிகளில் வெளி மாநிலங் களுக்கு விற்பனைக்கு செல்கிறது. 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேங்காய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது.
 
தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால், தேங்காய் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

வாழப்பாடி மண்டிகளில் இருந்து தினமும் வடமாநிலங்களுக்கு தேங்காய் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:&

ஆன்டுதோறும் புரட்டாசி தொடங்கி தை மாதம் வரை மழை மற்றும் குளிர் காலம் என்பதால், முற்றிய தேங்காய் மகசூல் கிடைக்க அதிக நாட்களாகும். இதனால், 6 மாதங்கள் வரை தேங்காய் மகசூல் குறைவாக இருக்கும்.
 
மாசி மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை கோடையில் தேங்காய்களில் நீர் இருப்பு குறைந்து, முற்றிய தேங்காய் மகசூல் விரைவாக கிடைக்கும். தற்போது, முற்றிய தேங்காய் விளைச்சல் அதிகரித்து, மண்டிகளுக்கு வரத்து கூடியுள்ளது. 

மேலும், கொரோனா கட்டுப்பாடு நீக்கத்தால், தேங்காய் தேவைகள் பல்வேறு வகையில் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் தேங்காய் வர்த்தகம் விறுவிறுப்படைந்தள்ளது.

வாழப்பாடி மண்டிகளில் இருந்து, குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கடந்த காலங்களில் மாதம் தோறும் லாரிகளி 8 முதல் 10 லோடு 2.50 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. 

தற்போது, மாதம் 15 லோடு வரை 3.75 லட்சம் தேங்காய் அனுப்பப்படுகிறது. மகசூல் அதிகரிப்பால் ஒரு தேங்காய் ரூ.8 வரை விலை குறைந்துள்ளது. கொரோனா காலத்தை விட, வர்த்தகம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.
Tags:    

Similar News