தமிழ்நாடு
பத்ம விருது பெறுவோர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது சமூக வளைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது :
முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, டாடா குழுமத் தலைவர் சந்திர சேகரன், கூகுள் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 21 பேருக்கு பத்மபூஷன் உட்பட 122 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் வாழ்த்துகள்.
விமான விபத்தில் காலமான முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டிருப்பது அவருக்கு செய்யப்பட்டிருக்கும் சிறந்த மரியாதை. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டிருப்பதும் சிறப்பு .
தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் தாமோதரன், நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, கலைத் துறையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள், ஏ.கே.சி. நடராஜன் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.