தமிழ்நாடு
மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள சுகுமாருக்கு சொந்தமான வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
மதுரை:
மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலத்தில் மேலாளராக பணியாற்றுபவர் சுகுமார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உதவி கலெக்டராகவும், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையராகவும் (கலால்) பணியாற்றினார்.
அப்போது சுகுமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ரூ.50 லட்சம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் மதுரை சாத்தமங்கலம் விநாயகமூர்த்தி நகரிலுள்ள சுகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள சுகுமாருக்கு சொந்தமான வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலத்தில் மேலாளராக பணியாற்றுபவர் சுகுமார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உதவி கலெக்டராகவும், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையராகவும் (கலால்) பணியாற்றினார்.
அப்போது சுகுமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ரூ.50 லட்சம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் மதுரை சாத்தமங்கலம் விநாயகமூர்த்தி நகரிலுள்ள சுகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள சுகுமாருக்கு சொந்தமான வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை நடத்தினர்.