தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 110.35 அடியாக குறைந்தது

Published On 2022-01-24 04:28 GMT   |   Update On 2022-01-24 04:28 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 758 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து வினாடிக்கு 815 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கால்வாயில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 110.80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 110.35 அடியானது. அணையில் தற்போது 78.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News