தமிழ்நாடு
துணை ஜனாதிபதி விரைவில் குணமடைய தமிழக முதலமைச்சர் வாழ்த்து
துணை ஜனாதிபதி வெங்கையா நாயடுவுக்கு தற்போது 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைத்துறை, விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 2-வது முறையாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தெரிவித்திருப்பதாவது:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு , கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய விழைகிறேன். மேலும், நான் துணை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.