தமிழ்நாடு
தமிழ் நாடு அரசு

பேரூராட்சி தலைவர் பதவி: வாலாஜாபாத், பள்ளிப்பட்டு, அச்சிறுப்பாக்கம், மீஞ்சூர் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கீடு

Published On 2022-01-18 10:29 GMT   |   Update On 2022-01-18 10:29 GMT
பழங்குடியின பெண்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோளூர், தேவர் சோலா ஆகிய பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பொதுப் பிரிவில் கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 490 பேரூராட்சிகள் தற்போது உள்ளன. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பேரூராட்சி தலைவர் பதவிக்கான அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

பழங்குடியின பெண்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோளூர், தேவர் சோலா ஆகிய பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பொதுப் பிரிவில் கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பெண்களுக்கு தேசூர் (திருவண்ணாமலை), மருதூர் (கரூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தலைஞாயிறு (நாகை), கீளாம்பாடி (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), மூலக் கரைப்பட்டி (திருநெல்வேலி), திருப்பணந்தாள் (தஞ்சை), புதுப்பாளையம் (திருவண்ணாமலை), கீழ்வேளூர் (நாகை), இடைக்கழிநாடு (செங்கல்பட்டு), கணியூர் (திருப்பூர்), ஓவேலி (நீலகிரி), சின்னக்கம்பாளையம் (திருப்பூர்), கீழ்குந்தா (நீலகிரி), புதுப்பட்டி (தேனி), பூலாம்பாடி (பெரம்பலூர்), ஆயக்குடி (திண்டுக்கல்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), புலியூர் (கரூர்), பள்ளிகொண்டா (வேலூர்), முதூர் (திருப்பூர்), இலஞ்சி (தென்காசி),

மீஞ்சூர் (திருவள்ளூர்), அச்சிறுப்பாக்கம் (செங்கல்பட்டு), சுந்தரபாண்டியாபுரம் (தென்காசி), உதயேந்திரம் (திருப்பத்தூர்), குளத்துப் பாளையம் (திருப்பூர்), வேடப்பட்டி (கோவை), தேவ தானப்பட்டி (தேனி), மெலட்டூர் (தஞ்சை), நெய்க் காரப்பட்டி (திண்டுக்கல்), பேளூர் (சேலம்).

காட்டுப்புதூர் (திருச்சி), கொரடாச்சேரி (திருவாரூர்), தொட்டியம் (திருச்சி), விரக னூர் (சேலம்), பெத்த நாயக்கன்பாளையம் (சேலம்), அடிக்கரட்டி (நீலகிரி), மரக் காணம் (விழுப்புரம்), ஹுலி கள் (நீலகிரி), பாலசமுத் திரம் (திண்டுக்கல்), வீர பாண்டி (தேனி) ஆகிய 43 பேரூராட்சிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் பொதுப்ப பிரிவுக்கு, செந்தாரைப்பட்டி (சேலம்), நடுவட்டம் (நீலகிரி), கோம்பை (தேனி), அரும்பாவூர் (பெரம்பலூர்), பி.மல்லாபுரம் (தர்மபுரி), ருத்ராவதி (திருப்பூர்), அனந்தபுரம் (விழுப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), எஸ்.கொடிக்குளம் (விருது நகர்), பெரளம் (திருவாரூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்ம புரி), கங்குவார்பட்டி (தேனி), ஆர்.புதுப்பட்டி (நாமக்கல்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஆலங்கா யம் (திருப்பத்தூர்), தென் கரை (தேனி), கீரனூர் (திண் டுக்கல்), தியாகத்துருவம் (கள்ளக்குறிச்சி), திருவேங் கடம் (தென்காசி), தேரூர் (கன்னியாகுமரி), வேப்பத் தூர் (தஞ்சை), மணல்மேடு (மயிலாடுதுறை), எஸ்.புதூர் (தென்காசி),

கருங்குழி (செங்கல்பட்டு), சீராப்பள்ளி (நாமக்கல்), தாமரைக்குளம் (தேனி), ஆய்குடி (தென்காசி), கொங்கனாபுரம் (சேலம்), காளப்பநாயக்கன் பட்டி (நாமக்கல்), அகரம் (திண்டுக்கல்), கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை), பி.மீனாட்சிபுரம் (தேனி), சித்தையன் கோட்டை (திண்டுக்கல்), படைவீடு (நாமக்கல்), பட்டி னம் (நாமக்கல்), கடத்தூர் (தர்மபுரி), ஹைவேவிஸ் (தேனி), ஆதனூர் (நாமக்கல்), கருப்பூர் (சேலம்), நாமகிரிப்பேட்டை (நாமக்கல்), கடையம்பட்டி (சேலம்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) ஆகிய 42 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு பெண்களுக்கு ஆரணி (திருவள் ளூர்), நாரவாரிகுப்பம் (திருவள்ளூர்) உள்பட 200 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற பேரூராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News