தமிழ்நாடு
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆட்டையாம்பட்டி:
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா 10 நாள் நடைபெறுவது வழக்கம். விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், தினசரி பூஜை, பக்தர்கள் இல்லாமல் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதற்காக கொடிமரத்துக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
பரம்பரை அறங்காவலர் , செயல் அலுவலர் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்று கொடியேற்றினர். தொடர்ந்து, மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமி உற்சவர் உள்புறப்பாடு நடந்தது.