தமிழ்நாடு
பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
ஒமிக்ரான் குறித்து அச்சம் வேண்டாம் எனவும் பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம்:
சேலம் வந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய வகை ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். முதல் தவணை தடுப்பூசியை போட்டவர்கள் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
வைரஸ் வகையில் மாற்றம் இருந்தாலும் பாதுகாப்பு முறைகள் என்பது ஒன்றுதான். ஏற்கனவே உள்ள கட்டுபாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் ஒமைக்ரான் புதிய வைரஸ் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.