செய்திகள்
ரெயில்

பண்டிகை கால முன்பதிவு சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2021-11-28 03:39 GMT   |   Update On 2021-11-28 03:39 GMT
சபரிமலை தரிசனம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சபரிமலை தரிசனம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கொல்லம் (வண்டி எண்: 06007) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 3, 10, 17, 24, 31-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 7, 10, 12, 14-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-சென்னை எம்.ஜி.ஆர் (06008) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 5, 12, 19, 26-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 11, 13, 16-ந் தேதிகளில் காலை 11.30 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (06005) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06006) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 24-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* நாகர்கோவில்-தாம்பரம் (06004) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 26-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக தாம்பரம்-நாகர்கோவில் (06603) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி மாலை 4 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News