செய்திகள்
கலெக்டர் அரவிந்த்

நாளைய முகாமில் தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2021-10-09 04:41 GMT   |   Update On 2021-10-09 06:08 GMT
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருந்தும் 2 பேர், நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து 2 பேர் மற்றும் மாவட்ட அளவில் 2 பேர் என மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் குறித்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மெகா முகாமில் தடுப்பூசி செலுத்தும் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருந்தும் 2 பேர், நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து 2 பேர் மற்றும் மாவட்ட அளவில் 2 பேர் என மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 2-ம் டோஸ் செலுத்த வேண்டி உள்ளவர்களும் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News