செய்திகள்
பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு

Published On 2021-09-25 07:15 GMT   |   Update On 2021-09-25 07:15 GMT
3-வது முறையாக மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கி உத்தரவிட்டது.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்காக இவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் பரோல் வழங்க மனு அளித்தார்.

அதன்படி பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28-ந் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 28-ந் தேதி பரோல் முடிந்து புழல் சிறைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு மீண்டும் 30 நாள் பரோல் வழங்கியது. இதனால் பாதி வழியிலேயே மீண்டும் பேரறிவாளன் வீட்டிற்கு திரும்பினார்.

அவருக்கு இன்றுடன் பரோல் நிறைவடைந்தது. இந்த நிலையில் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார்.

இதனையடுத்து 3-வது முறையாக மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதனால் பரோல் முடிந்து புழல் சிறைக்கு செல்ல இருந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டை வீட்டில் உள்ளார்.
Tags:    

Similar News