செய்திகள்
நகை பறிப்பு

திருப்பரங்குன்றம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2021-09-20 12:23 GMT   |   Update On 2021-09-20 12:51 GMT
திருப்பரங்குன்றம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது 80). இவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பேச்சியம்மாளை மோதுவதுபோல வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பேச்சியம்மாள் ரோட்டின் ஓரமாக நின்றுள்ளார்.இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் தங்க செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் பதறிப்போன பேச்சியம்மாள் திருநகர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்
Tags:    

Similar News