செய்திகள்
சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி

Published On 2021-09-19 09:19 GMT   |   Update On 2021-09-19 09:19 GMT
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர்.
கன்னியாகுமரி:

கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் சுற்றுலாத் தலங்கள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, சொத்தவிளை பீச், திக்குறிச்சி, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், குளச்சல் கடற்கரை போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்

கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் கடலில் குளிப்பதற்கும் அனுமதிஅளிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். அதன்பிறகு படிப்படியாக சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதனால் கொரோனா பரவல் திடீர் என்று அதிகரிக்கத் தொடங்கியது. இதைதொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் சனிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை.

ஞாயிற்றுகிழமையான இன்று 2-வது நாளாக படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. மேலும் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் பாதைகளும் மூடப்பட்டிருந்தன. கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி கடற்கரைக்குச் சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து விரட்டியடித்தனர். இதனால் கன்னியாகுமரி உள்பட அனைத்து கடற்கரை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
Tags:    

Similar News