செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதயுதவி வழங்க வணடும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தேனி :
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 2017ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தர்மர் என்பர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி வெங்கடேசன் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, தர்மர் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதயுதவி வழங்க வணடும் என உத்தரவு பிறப்பித்தார்.