செய்திகள்
மதுரை மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி
மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு பிரிவு உதவி அலுவலராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனே அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் சண்முகபிரியா கொரோனா தொற்று காரணமாக இறந்தார். 8 மாத கர்ப்பிணியான இவர் இறந்த சம்பவம் டாக்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சோகம் மறைவதற்குள் தற்போது மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு பிரிவு உதவி அலுவலராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனே அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் சண்முகபிரியா கொரோனா தொற்று காரணமாக இறந்தார். 8 மாத கர்ப்பிணியான இவர் இறந்த சம்பவம் டாக்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சோகம் மறைவதற்குள் தற்போது மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.