செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட சைக்கிளை கோ தளபதி எம்எல்ஏ சிறுவனிடம் ஒப்படைத்தார்

கொரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவனுக்கு மு.க.ஸ்டாலின் சைக்கிள் பரிசு

Published On 2021-05-10 07:42 GMT   |   Update On 2021-05-10 08:25 GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய சைக்கிளை மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி சிறுவனிடம் நேரில் ஒப்படைத்தார்.
மதுரை:

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். மாநகராட்சி மின் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரிஸ்வர்மன் (வயது 7). 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது தந்தை மூலம் அனுப்பி வைத்தார்.

இதனை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் ஹரிஸ்வர்மனை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.



மேலும் அந்த சிறுவனுக்கு புதிய சைக்கிளை பரிசாக வாங்கி கொடுத்து வாழ்த்தினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய சைக்கிளை மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி சிறுவனிடம் நேரில் ஒப்படைத்தார். அப்போது சிறுவன் ஹரிஸ்வர்மன் அந்த சைக்கிளை ஓட்டி மகிழ்ந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகன் ஹரிஸ்வர்மனுக்கு சைக்கிள் வழங்கியதற்கு அவனது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News