செய்திகள்
தீப்பிடித்து எரியும் பிளாஸ்டிக் கம்பெனி

மதுரையில் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து

Published On 2021-04-29 06:46 GMT   |   Update On 2021-04-29 06:46 GMT
மதுரையில் பிளாஸ்டிக் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
அவனியாபுரம்:

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெரு 12-வது குறுக்கு தெருவில் கோபிநாத் என்பவர் 6 ஆண்டுகளாக பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் வேலயை முடித்து விட்டு கோபிநாத் கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கோபிநாத் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு படை அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் கம்பெனியில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்.




Tags:    

Similar News