செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1499 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-04-20 05:14 GMT   |   Update On 2021-04-20 05:14 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று 216 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 1,499 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குடிநீருக்காக காவிரியில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 97.54 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 97.55 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News