செய்திகள்
கொரோனா வைரஸ்

பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Published On 2021-04-17 09:46 GMT   |   Update On 2021-04-17 09:46 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.எஸ்.மூர்த்தி. இவர் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலயில் கே.எஸ்.மூர்த்திக்கு சளி, இருமல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மூர்த்தி எம்.எல்.ஏ. கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பல்வேறு வேட்பாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்ற வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News