செய்திகள்
முத்துகிருஷ்ணன்

நெல்லையில் கொரோனா தடுப்பூசி போட்டவர் ‘திடீர்’ உயிரிழப்பு

Published On 2021-04-15 09:06 GMT   |   Update On 2021-04-15 09:06 GMT
நெல்லையில் உயிரிழந்த கூலித்தொழிலாளி தடுப்பூசி போட்டதால் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை டவுன் கூலக்கடை பஜாரைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் பேரில் கடந்த 8-ந் தேதி முத்துக்கிருஷ்ணன் முதலாவது தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அது தீவிரமான நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் முத்து கிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் இறந்து விட்டார். எனவே அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது உறவினர்கள் டவுண் போலீசில் இன்று புகார் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் தடுப்பூசி போட்டதால் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News