செய்திகள்
கொரோனா விதிமுறை மீறல் - சென்னையில் இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,351 பேர் மீது வழக்குகள் பதிந்து ரூ.4.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை:
கொரோனா கட்டுப்பாடு விதிமுறை மீறுபவர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
சென்னையில் கொரோனா விதிகளை மீறியதாக இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,351 பேர் மீது வழக்குகள் பதிந்து ரூ.4.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 119 வழக்குகள் பதிவு செய்து ரூ.59 ஆயிரத்து 500 அபராதம் வசூலித்துள்ளனர்.