செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் அ.வள்ளியம்மாள் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனைப்படுகிறேன்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தாயாரை இழந்துவாடும் விஜயலட்சுமி பன்னீர்செல்வத்துக்கும், அவர்தம் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், கழக உடன்பிறப்புகள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வள்ளியம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் அ.வள்ளியம்மாள் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனைப்படுகிறேன்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தாயாரை இழந்துவாடும் விஜயலட்சுமி பன்னீர்செல்வத்துக்கும், அவர்தம் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், கழக உடன்பிறப்புகள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வள்ளியம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.