செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக சரிந்தது

Published On 2021-03-26 08:19 GMT   |   Update On 2021-03-26 08:19 GMT
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் குறைவாக வருகிறது. நேற்று விநாடிக்கு 55 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது. இன்று மேலும் குறைந்து விநாடிக்கு 45 கனஅடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 100.29 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.17 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News