செய்திகள்
கோவை அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- காய்கறி கடைக்காரர் கைது
கோவை அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காய்கறி கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
துடியலூர்:
கோவையை அடுத்த துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பாரதி வீதியை சேர்ந்தவர் சிவகுமரேசன் (வயது 40). இவர் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது குழந்தைகள் இல்லை. இவர், நட்பாக பழகிய ஒரு குடும்பத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார்.
சிறுமியுடன் சிவகுமரேசன் பழகுவதை அந்த குடும்பத்தினர் தவறாக நினைக்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிவகுமரேசன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமரேசனை கைது செய்தார்.