செய்திகள்
தற்கொலை

திருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை

Published On 2021-02-28 07:19 GMT   |   Update On 2021-02-28 07:19 GMT
திருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக்பாண்டி (வயது 27). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் கோபிநாத் என்ற மகன் உள்ளான்.

விவேக்பாண்டி கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த அவரது அம்மாவும், அக்காவும் அவரை கண்டித்தனர்.

மன வேதனை அடைந்த விவேக்பாண்டி சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து தனக்குத்தானே வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தம் வெளியேறிய அவர் படுகாயத்துடன் கீழே சரிந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News