செய்திகள்
பஸ் ஸ்டிரைக்- மெட்ரோ ரெயிலில் 1.8 லட்சம் பேர் பயணம்
மெட்ரோ ரெயிலில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பஸ் ஸ்டிரைக் நீடித்து வருவதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் நேற்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர்.
மெட்ரோ ரெயிலிலும் வழக்கத்தை விட பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 691 பேர் பயணம் செய்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் வழித்தடத்தில் 15 ஆயிரத்து 148 பேர் பயணித்துள்ளனர். கடந்த 24-ந்தேதி 97 ஆயிரத்து 786 பேர் பயணம் செய்தனர். விரிவாக்கம் செய்யப்பட்ட வழித்தடத்தில் 13 ஆயிரத்து 422 பேர் பயணித்தனர்.
மெட்ரோ ரெயிலில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பஸ் ஸ்டிரைக் நீடித்து வருவதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் நேற்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர்.
மெட்ரோ ரெயிலிலும் வழக்கத்தை விட பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 691 பேர் பயணம் செய்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் வழித்தடத்தில் 15 ஆயிரத்து 148 பேர் பயணித்துள்ளனர். கடந்த 24-ந்தேதி 97 ஆயிரத்து 786 பேர் பயணம் செய்தனர். விரிவாக்கம் செய்யப்பட்ட வழித்தடத்தில் 13 ஆயிரத்து 422 பேர் பயணித்தனர்.
மெட்ரோ ரெயிலில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பஸ் ஸ்டிரைக் நீடித்து வருவதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.