செய்திகள்
வேல்முருகன்

மத்தியில் பா.ஜனதா சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது- வேல்முருகன் பேட்டி

Published On 2021-02-23 12:20 GMT   |   Update On 2021-02-23 12:20 GMT
மத்தியில் பா.ஜனதா சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

சேலம்:

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலத்தில் எங்கள் கட்சியின் சார்பாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தினை வழிநடத்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாநாடு அமையும். சாதி, மத மோதல் இல்லாமல் தமிழர்களின் பராம்பரியத்தை பாதுகாக்கின்றதாக தமிழ்நாடு மாற வேண்டும்

புதுவையில் பா.ஜ.க. குறுக்கு வழியில் தனக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை குழி தொண்டி புதைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை பார்க்கும் போது பா.ஜனதா ஆட்சி சர்வதிகார ஆட்சியாக மாறி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களால் கடைக்கோடி உள்ள மக்களுக்கு என்ன பயன் உள்ளது. பிரதமர் டெல்லியில் போராடும் விவசாயிகளின் குறித்து வாய் திறக்காது மவுனம் காப்பது ஏன்?

பா.ம.க.வின் உயிர் மூச்சு கொள்கை என்ற ராமதாஸ், மத்தியில் மந்திரியாக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடு பிரச்சினையை மறந்துவிட்டார். தனது கட்டுபாட்டியில் உள்ள வன்னியர் சொத்துகள் தன்னைவிட்டு போய்விடுமே என்ற பயத்தில் ராமதாஸ் தனது பெயருக்கு மாற்றி கொண்டுள்ளார்.

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அனுபவித்து வரும் வன்னியர் சொத்துக்கள் அரசுடைமை ஆகிவிடும் என்ற பயத்தில் தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர். பா.ம.க. நோட்டுக்கும் சீட்டுக்கும் தான் உள் இட ஒதுக்கீட்டை முன் எடுத்தது. காவிரி ,குண்டாறு போன்ற திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்குவது தேர்தலுக்கான அறிவிப்புகள் தான்.

கடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் கூறிய திட்டங்களை நிறைவேற்றாதது ஏன்? தமிழகத்தில் தேர்தலுக்காக அ.தி.மு.க. மக்களிடையே வெற்று விளம்பரத்தை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News