செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது

Published On 2021-02-16 04:23 GMT   |   Update On 2021-02-16 04:23 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அண்ணா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சக்திவேல் (வயது 19). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சக்திவேலுவுக்கு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவரவே அவர் தனது மகளை கண்டித்தார். இது குறித்து சிறுமி தனது காதலரிடம் தெரிவித்தார். இதனையடுத்து சக்திவேல் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்றார்.

இது குறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை அவரது பெற்றோருடன் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் சிறுமி செல்ல மறுத்து விட்டார்.

இதனையடுத்து போலீசார் சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் சிறுமியை சமாதானம் செய்த அவரது பெற்றோர் அவரை கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு அனுப்பி கண்காணித்து வந்தனர்.

அங்கு இருந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் 8 வார கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தனது மகளை சக்திவேல் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி விட்டதாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News