செய்திகள்
எச் ராஜா

சசிகலா வருகையால் அதிமுக கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது- எச்.ராஜா

Published On 2021-02-11 03:52 GMT   |   Update On 2021-02-11 03:52 GMT
சசிகலா வருகையால் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
சேலம்:

பா.ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் நெசவாளர் மற்றும் ஜவுளித்துறை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருத்து கூறி வரும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அவசியமானது. ஊழல் பற்றி தி.மு.க. பேசக்கூடாது. மார்ச் 15-ந் தேதிக்குள் தமிழகத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும்.

சசிகலா வருகையால் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. சசிகலாவை அ.தி.மு.க.வுடன் இணைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News