செய்திகள்
கோவையில் ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உடல் சிதறி பலி
கோவையில் ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் கனகசுப்பு. இவரது மகன் சிவா (வயது 22). இவரது நண்பர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் பவித்ரன் (வயது 22). இவர்கள் 2 பேரும் கோவை மயிலேறிபாளையம் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் ஆர்கிடெக்ஷர் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
2 பேரும் ஆன்லைனில் தேர்வு எழுத கோவை தண்ணீர் பந்தல் அடுத்த ஜெகநாதபுரத்தில் அறை எடுத்து தங்கினர். நேற்று இரவு 2 நண்பர்களுடன் மேலும் ஒருவர் சேர்ந்து கொண்டார். 3 பேரும் பீளமேடு- வடகோவை ரெயில்வே தண்டவாளம் ஹோப்ஸ் கல்லூரி பகுதியில் நடந்து சென்றனர். அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்தது. ரெயில் மிக அருகில் வந்தபோது மற்றொரு நண்பர் அலறி சத்தம்போட்டு தண்டவாளத்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார்.
மற்ற 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் வேகமாக வந்த ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் சிவாவும், பவித்தரனும் ரெயிலில் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 கல்லூரி மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் கனகசுப்பு. இவரது மகன் சிவா (வயது 22). இவரது நண்பர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் பவித்ரன் (வயது 22). இவர்கள் 2 பேரும் கோவை மயிலேறிபாளையம் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் ஆர்கிடெக்ஷர் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
2 பேரும் ஆன்லைனில் தேர்வு எழுத கோவை தண்ணீர் பந்தல் அடுத்த ஜெகநாதபுரத்தில் அறை எடுத்து தங்கினர். நேற்று இரவு 2 நண்பர்களுடன் மேலும் ஒருவர் சேர்ந்து கொண்டார். 3 பேரும் பீளமேடு- வடகோவை ரெயில்வே தண்டவாளம் ஹோப்ஸ் கல்லூரி பகுதியில் நடந்து சென்றனர். அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்தது. ரெயில் மிக அருகில் வந்தபோது மற்றொரு நண்பர் அலறி சத்தம்போட்டு தண்டவாளத்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார்.
மற்ற 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் வேகமாக வந்த ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் சிவாவும், பவித்தரனும் ரெயிலில் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 கல்லூரி மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.