செய்திகள்
திருப்பூரில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒருவர் கைது
திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் வாளால் கேக் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ். கடந்த திங்கட்கிழமை இவரது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட அவரது நண்பர்கள் முடிவு செய்தனர். சக்தி நகர் கோவில் முன் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடி சதீஷ்க்கு கேக் வெட்டியுள்ளனர்.
அப்போது சதீஷ்-ஐ வாளால் கேக் வெட்ட கேட்டுக்கொண்டுள்ளனர். அவரும் வாளைக் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார். அத்துடன் அருகில் வசிக்கும் மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் கூச்சல் போட்டுள்ளனர். சிலர் மாடியில் இன்று போட்டோ எடுத்துள்ளனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, போலீசார் சதீஷை கைது செய்துள்ளனர்.