செய்திகள்
ராகுல் காந்தி

தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன் - ராகுல்காந்தி

Published On 2021-01-23 11:50 GMT   |   Update On 2021-01-23 11:50 GMT
தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கோவை:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில், தேர்தல் பிரசாரத்திற்காக 3 நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்துளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் ராகுல்காந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்நிலையில், ராகுல்காந்தி தனது முதல்கட்ட பிரசாரத்தை இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார். கோவையின் சின்னியபாளையத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

* தமிழகத்தின் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை

* தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரதமர் (மோடி) புரிந்து கொள்ளவில்லை

*இந்தியாவில் ஒரு மொழி மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் (மோடி) விரும்புகிறார்

* தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும்  

* தமிழர்களின் உரிமைகளை, எதிர்பார்ப்புகளை பாதுகாப்பேன்.

* தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் தமிழகமே இந்தியாக இருக்கும்

என்றார்.
Tags:    

Similar News