செய்திகள்
மரணம்

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

Published On 2021-01-22 02:53 GMT   |   Update On 2021-01-22 02:53 GMT
3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:

சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). பெயிண்டரான இவர், திருவொற்றியூர் ஜானகியம்மாள் எஸ்டேட் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். வீட்டின் 3-வது மாடியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜேஷ், எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி அங்கிருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News