செய்திகள்
கொரோனா வைரஸ்

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று

Published On 2021-01-21 08:25 GMT   |   Update On 2021-01-21 08:25 GMT
தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதால் ஆட்சியர் பல்லவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News