செய்திகள்
கமல்ஹாசன்

’மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ - கமல்ஹாசன் டுவீட்

Published On 2021-01-19 17:28 GMT   |   Update On 2021-01-19 17:28 GMT
காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால், அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவந்தார். அப்போது, அறுவை சிகிச்சை செய்த காலில் அவருக்கு திடீரென மீண்டும் வலி ஏற்பட்டது.

இதனால் பிரசார நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது வலது காலில் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

’அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News