செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1069 கன அடியாக குறைந்தது

Published On 2021-01-08 06:31 GMT   |   Update On 2021-01-08 06:31 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலையில் 1277 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று குறைந்து விநாடிக்கு 1069 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் இன்று காலை 8 மணி அளவில் அணை நீர்மட்டம் 104.92 அடியாக உள்ளது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News