செய்திகள்
சிலுவை பூக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் சிலுவை பூக்கள்

Published On 2020-12-20 10:12 GMT   |   Update On 2020-12-20 10:12 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது சிலுவை பூக்கள் அதிக அளவு பூத்துக்குலுங்குகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சிலுவை வடிவிலான பூக்கள் அதிக அளவு பூத்துக்குலுங்கும். இவற்றை சிலுவை பூக்கள் என்றும் பொதுமக்கள் அழைக்கின்றனர். அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த பூக்கள் பூத்துக்குலுங்குவதால், அவை பலரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும். 

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் மின் அலங்காரம் செய்து, அவற்றில் நட்சத்திர மின் விளக்குகளை எரியவிட்டுள்ளனர். 

இதற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது சிலுவை பூக்கள் அதிக அளவு பூத்துக்குலுங்குகின்றன. அவற்றை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News