செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 106.38 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 3 ஆயிரத்து 580 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 551 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 500 கன அடியும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 106.24 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 106.38 அடியாக உயர்ந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 3 ஆயிரத்து 580 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 551 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 500 கன அடியும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 106.24 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 106.38 அடியாக உயர்ந்தது.