செய்திகள்
முத்தரசன்

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக குழு கூட்டம் 15-ந்தேதி தொடங்குகிறது

Published On 2020-12-13 10:31 GMT   |   Update On 2020-12-13 10:31 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக்குழுக் கூட்டங்கள் வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெறுகிறது.

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருப்பூர் அருகில் உள்ள செங்கப்பள்ளியில் நடைபெறுகிறது.

முதன் இரண்டு நாள் நிர்வாகக் குழுக் கூட்டமும், 3-வது நாள் மாநிலக்குழுக் கூட்டமும் நடைபெறும். இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் இரா. நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், எம்.பி.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள்.

நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகள், கொரோன நோய் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் சந்திக்கும் பிரச்சினைகள், வருகிற சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புப் பணிகள் உள்பட முன்னுரிமை பெறும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News