செய்திகள்
போலீசார் விசாரணை

2 மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்

Published On 2020-12-10 09:06 GMT   |   Update On 2020-12-10 09:06 GMT
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 2 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அப்படி எதுவும் இல்லை என்பது தெரிந்ததும் மிரட்டல் விடுத்த நபரை வலைவீசி தேடினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் நம்பரை வைத்து 2 மணி நேரத்தில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் 115 என்ற எண்ணை சொன்னதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை அந்த எண் கோர்டு வேர்டாக இருக்குமோ என சந்தேகித்தனர். மேலும் அது ஒரு வீட்டின் முகவரியா? அல்லது விடுதியில் உள்ள நம்பரா என பல கோணத்தில் விசாரித்து பார்த்தும் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. இறுதியில் அந்த நபர் பிடிபட்டதும் தான் எண் 115 அவர் தங்கியிருந்த அறையின் நம்பர் என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News