செய்திகள்
நீர்மட்டம் 104 அடியாக உள்ள நிலையில் மேட்டூர் அணையை படத்தில் காணலாம்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்வு

Published On 2020-12-10 02:09 GMT   |   Update On 2020-12-10 02:09 GMT
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் :

புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் டெல்டா மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த ஒரு வாரமாக அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை அவ்வப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 99 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 7 ஆயிரத்து 556 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 103.52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 103.93 அடியாக இருந்தது. பின்னர் மாலையில் 104 அடியை எட்டியது.
Tags:    

Similar News