செய்திகள்
விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளில் பச்சை கொடி கட்டி திறந்து இருந்தனர்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மறியல்

Published On 2020-12-08 08:43 GMT   |   Update On 2020-12-08 08:43 GMT
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் உள்பட சில இடங்களில் பச்சை கொடி கட்டி கடையை திறந்து இருந்தனர். சில இடங்களில் மட்டும் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மற்ற பெரும்பாலான இடங்களில் அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள், லாரிகள் வழக்கம்போல் ஓடின.

Tags:    

Similar News