செய்திகள்
நீதிபதி உத்தரவு

விபத்தில் உயிரிழந்த கொத்தனார் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் இழப்பீடு- நீதிபதி உத்தரவு

Published On 2020-12-04 01:45 GMT   |   Update On 2020-12-04 01:45 GMT
விபத்தில் உயிரிழந்த கொத்தனார் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா இலுப்பக்கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. கொத்தனார். கடந்த 2018-ம் ஆண்டு இவர், சென்னை வேளச்சேரி-சேலையூர் கேம்ப் ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தங்கராசு இறந்து போனார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி ராஜேஸ்வரி ரூ.38 ½லட்சம் இழப்பீடு கோரி சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, மனுதாரருக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.15 லட்சத்து 72 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து ஆண்டுக்கு 7½ சதவீத வட்டி அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

Similar News