செய்திகள்
கருணாஸ்

சாதி வாரியான கணக்கெடுப்பு- தமிழக அரசின் முடிவுக்கு கருணாஸ் பாராட்டு

Published On 2020-12-03 02:41 GMT   |   Update On 2020-12-03 02:41 GMT
தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் வரவேற்பதாக கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.

மத்திய அரசு அறிவித்த சீர்மரபினர் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் உடனடியாக நடத்தக்கோரி, 68 சமுதாய மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். இந்த ஆணையம் விரைவாக செயல்பட்டு அந்தந்த சமூகத்தினரின் சமூக நீதியை நிலைநாட்ட வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News