செய்திகள்
’நடராஜனின் வெற்றி பயணம் தொடர வேண்டும்’ - விஜயகாந்த் வாழ்த்து
சர்வதேச போட்டியில் வெற்றி பயனத்தை தொடங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;-
சர்வதேச போட்டியில் வெற்றி பயனத்தை தொடங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்
தமிழக வீரர் நடராஜன் தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன், இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நடராஜனின் வெற்றி பயணம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
என தெரிவித்துள்ளார்.