செய்திகள்
பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ வெங்காயம் திருட்டு
பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைராஜ். இவர் தன் நிலத்தில் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்நிலையில் பட்டறையை பிரித்த மர்ம நபர்கள், சுமார் 400 கிலோ சின்ன வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் ஆலத்தூர் அருகே ரவி என்பவரின் விவசாய நிலத்திலும் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 250 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.